ஞாயிறு, 18 மார்ச், 2018

தேனீ கூடு கட்டுவதற்கும் வாஸ்துவுக்கும் என்ன தொடர்பு?


bharathegopu.business.site

தேனீ கூடு கட்டுவதற்கும் வாஸ்துவுக்கும் என்ன தொடர்பு?



 இயற்கையிலேயே இந்த பிரபஞ்சம் பல அதிசயங்களை கொண்டுள்ளது. அதேபோல் இயற்கையை புரிந்து வாழ்பவர்களுக்கு என்றுமே கஷ்டங்கள் வருவதில்லை. அவர்கள் என்றுமே பிரச்சனையில் சிக்கி கொள்வதில்லை. அந்த வகையில் தேனீ கூடு கட்டுவதற்கும் மனித வாழ்க்கைக்கும் நெருங்கிய சில தொடர்புகள் உண்டு.

தேனீக்கள் கூடு கட்டக்கூடிய இடங்கள் :

1. மிகப்பெரிய வியாபாரஸ்தலங்கள்

2. அப்பார்ட்மெண்ட்

3. உபயோகமில்லாத கட்டிடங்கள்

4. மலை முகடுகள்

5. உயரமான மரங்கள்

6. சூரிய ஒளிகீற்று படாத இடங்கள்

7. ஆட்கள் நடமாட்டம், தொந்தரவு இல்லாத இடங்கள்

8. மிக சுத்தமான இடங்கள்

இங்கெல்லாம் தேனீக்கள் கூடுகட்டும்போது ஏற்படக்கூடிய அல்லது வரக்கூடிய பிரச்சனைகள்தான் என்ன?

1. ஆண்களின் ஆதிக்கம் வீழ்ச்சியடைகிறது.

2. பொருளாதார சரிவு ஏற்படுகிறது.

3. அந்த இடம் கடன் சுமைக்கு தள்ளப்படுகிறது.

4. பெண் சொத்தாக மாற வாய்ப்புள்ளது.

5. ஆண்கள் நோயால் பாதிக்கப்படக்கூடும்.

6. கண்பார்வையில் குறைபாடு ஏற்பட வாய்ப்புண்டு.

7. தோல் சம்மந்தமான வியாதி வர வாய்ப்புண்டு.

8. பெண் நிர்வாகமாக மாறி போகுதல்.

9. நிர்வாக சீர்குலைவு ஏற்படுதல்.

நம் குடியிருப்பு பகுதியில் பறவைகள் கூடுகட்டும்போது இதுபோல பல பாதிப்புகள் வரக்கூடும். சிறிய பறவையான சிட்டுக்குருவி முதல் மிகப்பெரிய பறவையான கழுகு வரையில் எது கூடு கட்டினாலும் பாதிப்பு என்பது உறுதி. பெரும்பாலும் பறவைகள் கூடுகட்டும் இடம் சுத்தமில்லாத இடமாக இருக்கும்.

பாதிப்புகள் :

1. ஆண்களுக்கு ர்நயசவ சம்பந்தமான பிரச்சனைகள்வர வாய்ப்புண்டு

2. குழந்தை பிறப்பு தள்ளிபோகுதல்

3. வறுமை, கடன்சுமை ஏற்படுதல்

4. மனநலம் தொடர்பான பிரச்சனைகள்

5. கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடு

6. சொத்து ஏலம் போகும் அளவிற்கு கடன்சுமை

7. கலகம் ஏற்படுதல்

இதுபோல இயற்கையில் பல அறிகுறிகள் இருந்தாலும் காலப்போக்கில் யாரும் நமக்கு எடுத்து கூறாத பட்சத்தில் எது சரி, எது தவறு என்பதை உணர்வதற்குள் அனைத்து பிரச்சனைகளும் நடந்து முடிந்து விடுகிறது.

கோவிலில் வழிபடும் முறைகள்



கோவிலில் நாம் செய்யும் தவறுகள் -  திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு !!
கோவிலில் வழிபடும் முறைகள் !!
✴ குளித்து, சுத்தமாக கோவிலுக்கு செல்ல வேண்டும். கோவிலிற்கு வெறுங்கையுடன் செல்லாமல் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு மற்றும் பூ ஆகியவற்றை வாங்கி செல்ல வேண்டும்.

✴ சிவன் கோவிலென்றால் வில்வத்தாலும், பெருமாள் கோவிலென்றால் துளசியாலும் அர்ச்சனை செய்ய வேண்டும். கோபுரத்தை வணங்கிவிட்டே உள்ளே செல்ல வேண்டும்.

✴ நமஸ்காரம் செய்யும் போது மேற்கு அல்லது தெற்கில் கால் நீட்டல் வேண்டும். வடக்கிலும், கிழக்கிலும் கால் நீட்டுதல் கூடாது.

✴ விநாயகர் சன்னதியில் தலையில் மூன்று முறை கொட்டிக் கொண்டு, 3 தோப்புக் கரணம் போட வேண்டும்.

✴ விநாயகரை ஒரு தரமும், சூரியனை 2 தரமும், அம்பாளையும், விஷ்ணுவையும் 4 தரமும், ஆஞ்சநேயரை 5 முறையும் பிரதட்சணம் செய்ய வேண்டும்.

✴ மூலவருக்கு அபிஷேகம் நடந்தால், பிரகாரத்தை சுற்றக்கூடாது. அபிஷேகத்தை கண்டால் அலங்காரமும் பார்க்க வேண்டும்.

✴ நமது வேண்டுதல்களையெல்லாம் கொடிமரத்தின் அருகே நின்று கேட்க வேண்டும். அதற்கு பிறகு வேறெந்த சன்னதியிலும் சிவன் நாமம், நாராயண நாமம் தவிர வேறெந்த சிந்தனையும் இருக்கக்கூடாது. கோவிலுக்குள் ஒருவருடனும் பேசக்கூடாது.

✴ ஆலயத்திற்குள் ஒருவரை ஒருவர் கும்பிடக்கூடாது. ஏனெனில், கும்பிட்டவரின் பாவம் எதிரில் உள்ளவரை சேரும். சனிபகவானை நேருக்கு நேர் நின்று கும்பிடக்கூடாது.

✴ ஆலய வளாகத்திற்குள் அசுத்தம் செய்தல், குப்பையைப் போடுதல் போன்றவற்றை செய்தல் கூடாது.

✴ கோவிலிலிருந்து பிரசாதம் தவிர வேறெதையும் எடுத்துச் செல்லக்கூடாது.

✴ சண்டிகேசுவரரின் சன்னதியில் நூலை கிழித்துக் போடக் கூடாது. சிவ தியானம் பூர்த்தி செய்யச் சொல்லி அவரிடம் வேண்டிவிட்டு, சிவனுடைய அருளைத் தவிர, வேறெதையும் கொண்டு செல்லவில்லை என்று சண்டிகேசுவரரிடம் தெரிவித்துவிட்டு செல்ல வேண்டும்.

✴ சிவன் கோவிலில் காலபைரவரையும், பெருமாள் கோவிலில், சக்கரத்தாழ்வாரையும் வழிபட்டால் செய்வினை தோஷங்கள் அணுகாது.

✴ கோவிலுக்கு சென்று விட்டு நேரே வீட்டிற்கு செல்ல வேண்டும். இப்படியெல்லாம் அனுஷ்டித்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
bharathegopu.business.site