புதன், 21 மார்ச், 2018

வீட்டில் பணம் தங்கவில்லையா? என்ன சொல்கிறது வாஸ்து

bharathegopu.business.site

வீட்டில் பணம் தங்கவில்லையா? என்ன சொல்கிறது வாஸ்து



வீட்டில் எவ்வளவு பணம் வந்தாலும் தங்கவில்லை...விரையச் செலவு அதிகமாக ஆகிறதே...என்ன தான் செய்வது, வீட்டை மாற்றி விடலாமா, இல்லை ஏதேனும் நல்ல ஜோதிடரை அணுகலாமா என்று புலம்புபவர்கள் அதிகம்...
எதற்காக இப்படி? யோசிக்க வேண்டிய விஷயம். வாடகை வீடு என்றால் மாற்றி விடலாம்..சொந்த வீடு என்றால் எப்படி மாற்ற முடியும்...சரி அப்படி என்ன தான் பிரச்னை. நாம் ஏதேனும் தவறுகள் செய்கிறோமோ? சரி விஷயத்திற்கு வருவோம்.
ஒருவரது வீட்டில் செல்வம் நிலைக்காமல் இருக்கிறது என்றால், அந்த வீட்டில் எதிர்மறையான ஆற்றலை ஈர்க்கும் விஷயங்கள் ஏதோ உள்ளதாக வாஸ்து சாஸ்திரங்கள் கூறுகின்றது. வாஸ்து சாஸ்திரம் கூறுவதைப் போல நமது வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும்படி, இருக்கும் அந்தத் தவறான செயல்பாடுகள் என்ன தெரியுமா?
பெரும்பாலும் ஒரு வீட்டின் லட்சுமி கடாட்சம் எங்கு நிறைந்திருக்கும் என்றால் அது நம் வீட்டின் பூஜை அறையில் தான். நமது வீட்டுப் பூஜை அறை சரியான திசையில் அமைக்கப்பட்டுள்ளதா  என்று கவனிக்க வேண்டும். பின்னர், பூஜை அறையில் வைக்கப்பட்டுள்ள சாமி சிலைகளை கவனிக்க வேண்டும். இரண்டு தெய்வங்களின் சிலைகளை எதிரெதிரே பார்த்தவாறு வைத்தல் கூடாது. ஏனெனில் இதனால் நமது வீட்டில் செலவுகள் அதிகரித்து, வருமானம் குறைந்துவிடும் என்கிறது வாஸ்து.
வீட்டில் உடைந்த கண்ணாடி அல்லது வேறு கண்ணாடி பொருட்கள் மற்றும் விரிசல் அடைந்த கண்ணாடி ஆகியவற்றை வைத்திருக்கக் கூடாது. இவைகள் நமது வீட்டில் நிதி சிக்கல்களை ஏற்படுத்துமாம். உடைந்த சாமி சிலைகள் அல்லது கடவுளின் கிழிந்த புகைப்படங்கள் இது போன்றவை வீட்டின் உட்புறம் மடித்து வைப்பதோ அல்லது தனியாக எடுத்து வைப்பதோ கூடாது. இவைகள் வீட்டின் பொருளாதார பிரச்னைகளை அதிகரிக்கும்.
வீட்டினுள் வளர்ப்பதற்கென்று உள்ள செடிகள் மட்டுமே வீட்டின் உள் பகுதியில் வைக்க வேண்டும். முட்கள் நிறைந்த செடிகளை வீட்டினுள் வைத்து வளர்க்காமல், வீட்டின் வெளிப்பகுதியில் வைத்து வளர்க்கலாம். ஏனெனில் இது நமது வீட்டில் பணப் பற்றாக்குறையை ஏற்படுத்தும்.
மேலும், நமது வீட்டில் பழுதடைந்த பொருட்களைக் கடையில் போடுவதற்கு மனமின்றி அப்படியே பரனை மேல் போட்டு வைக்கக்கூடாது. உதாரணமாக எலக்ட்ரானிக் பொருட்கள் பழுதடைந்த நிலையில் இருந்தால், அதை உடனடியாக சரிசெய்ய வேண்டும், இல்லையெனில் வெளியே அகற்றி விடுவது நல்லது. ஏனெனில் அவை நமது வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்தும்.
வீட்டினுள் எந்தப் பொருளை எங்கு வைக்கலாம், எந்தத் திசையில் வைத்தால் நல்லது என்று நமக்குத் தெரியவில்லை என்றாலும், தெரிந்தவர்களிடம் கேட்டு அதன்படி செயல்படுத்தினால் வீட்டில் எந்தவித பிரச்னையும், பொருள் இழப்பும் இன்றி வாழ்க்கை சுமூகமாக நடத்தலாம் என்கிறது வாஸ்து சாஸ்திரம்
வீடு கட்டும் யோகம் யாருக்கு






பூமிக்காரகன்ன் செவ்வாயின் நிலையையும் சம்பந்தப்பட்டவரின் ஜாதகத்தில் பார்க்க வேண்டும். நிலம் வாங்கி வீடு கட்டும் யோகம் அனைவருக்கும் அமையாது.

பலர் கட்டிய வீட்டை வாங்குவார்கள். ஆனால் ஒரு சிலருக்கு மட்டுமே நிலம் வாங்கி வீடு கட்டும் யோகம் கிடைக்கும். அதற்கு செவ்வாய், சுக்கிரன் இரண்டு கிரகமும் நன்றாக இருக்க வேண்டும்.


வீடு கட்டும் யோகம்

ஜாதகத்தின் ராசிகட்டத்தில் நான்காம் வீட்டின் அதிபதி ஆட்சி/உச்சம் பெற்று அந்த கிரகத்தின் திசை நடைபெற்றால் கட்டாயம் சொந்தவீடு கட்டி அதில் வசிக்கக்கூடிய யோகம் கிட்டும் ஆனால் அந்த வீடு லக்னத்திற்கு 6,8,12 ஆக இருக்ககூடாது. நான்காம் வீட்டில் நல்ல ஆதிபத்தியம் கொண்ட சுக்கிரபகவான் திக்பலம் பெற்றிருப்பது ஒரு சிறந்த அமைப்பு.இந்த திசை நடப்பில் வரும்போது சுயபுத்தி முடிந்து நான்காம்வீட்டின் அதிபதியுடைய புத்தி நடைமுறைக்கு வரும்போது கட்டாயம் வீடுகட்டுதல் சம்பந்தமான காரியங்களை நடத்தும் யோகம் உண்டாகும்.



சொந்த வீடு

நான்காம் வீட்டின் அதிபதி லக்னத்திற்கு கேந்திரம்/திரிகோணம் ஏறி பலமுடன் நின்று உடன் சுபகிரக சேர்க்கை/பார்வை பெற்று திசை நடைபெற்றாலும் வீடுகட்டும் யோகம் வாய்க்கும். நான்காம் வீட்டில் ராகுபகவான் இருந்தாலும் தீய கிரகசேர்க்கையின்றி அமைந்த ராகுவிற்கு இடம் கொடுத்த கிரகம் ஆட்சி/உச்சம் அடைந்து திசை நடைபெற்றால் சொந்தவீடு கட்டும் பாக்கியம் உண்டாகும்.


மாடி மேல் மாடி வீடு

பத்தாம் வீட்டிற்குரிய கிரகமும் நான்காம் வீட்டிற்குரிய கிரகமும் இணைந்து கேந்திரத்தில் பலமுடன் நின்று திசை நடைபெற்றால் ஏராளமான வீடுகளை கட்டி விற்பனை செய்யும் யோகம் உண்டாகும். லக்னத்திற்கு பன்னிரண்டாம் வீட்டிற்கு உரிய கிரகம் இரண்டாம் வீட்டில் அமர்ந்து சுபகிரகபார்வை பெற்று திசைநடைபெறும்போது சொந்தவீடு கட்டும் யோகம் உண்டாகும்.உடன் எத்தனை கிரகம் சேர்க்கை பெற்றுள்ளதோ அத்தனை வீடுகள் அமையும்.


மனை வாங்கலாம்

நான்காம் வீட்டில் செவ்வாய் பலமுடன் நின்று சுபகிரகபார்வை பெற்று திசை நடைபெறும்போது கட்டாயம் வீடுகட்டும் அல்லது நிலம் வாங்கும் பூமிபாக்யம் உண்டாகும். லக்னத்திற்கு ஒன்பதாம் அதிபதியின் திசை ஆட்சி/உச்ச பலத்துடன் நடைபெறும்போதும் சொந்தவீடு கட்டி மகிழ்ச்சியுடன் வாழும் வாழ்க்கைஅமைப்பு உண்டாகும். மேற்கண்ட கிரகஅமைப்புகள் உங்கள் ஜாதகத்தில் இருந்தாலும் அந்த கிரகங்களின் தசாபுத்தி நடைமுறைக்கு வந்தால் மட்டுமே யோகங்கள் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது.மேற்கண்ட கிரக அமைப்புகளை தவிர சொந்தவீடு தொடர்பான மேலும் நிறைய கிரகஅமைப்புகள் ஜோதிட ரீதியாக உள்ளன.


வளம்தரும் வாஸ்து பூஜை

வீட்டு மனை வாங்கியவர்கள் என்றைக்கு பூமி பூஜை போட்டு வீடு கட்டத்தொடங்க வேண்டுமென்பதை நம் முன்னோர்கள் தெளிவாகக் கூறிச் சென்றிருக்கிறார்கள். கட்டடம் கட்டுவதற்கும் பஞ்சபூத சக்திகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. வாஸ்து வழிபாடு செய்தால், கட்டடம் கட்டும்பணி எந்தவிதத் தடையுமில்லாமல், நல்லமுறையில் கட்டடம் வளர்ச்சி பெறும்.


இன்று வாஸ்து நாள்

வாஸ்து புருஷன் வருடத்தில் நான்கு மாதங்கள் அதாவது ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகிய மாதங்களில் உறக்கத்தில் இருப்பார். சித்திரை, வைகாசி, ஆடி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி என எட்டு மாதங்களில் பூமி பூஜை செய்யலாம். சித்திரை 10 வைகாசி 21, ஆடி 11,ஆவணி 6, ஐப்பசி 11,கார்த்திகை 8, தை 12,மாசி 22 தேதிகளில் வாஸ்து பூஜை செய்ய உகந்த நாட்களாகும். இந்த நாட்களில் வாஸ்து பகவான் மூன்றே முக்கால் நாழிகை வாஸ்து பகவான் விழித்திருக்கின்றார். ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்களாகும். அதாவது ஒன்றரை மணி நேரம் வாஸ்து பகவான் விழித்திருக்கின்றார்.


எப்போது பூஜை செய்வது

இந்த ஒன்றரை மணி நேரத்தில் முதல் 18 நிமிடங்கள் காலைக் கடன்களை முடித்து குளிப்பார். அடுத்த 18 நிமிடங்கள் பூஜை செய்வார். அதற்கு அடுத்த 18 நிமிடங்கள் சாப்பிடுவார். பின்னர் 18 நிமிடங்கள் வெற்றிலை பாக்குப் போடுவார். கடைசி 18 நிமிடங்கள் ஆட்சி செய்வார். உணவு அருந்த ஆரம்பித்து, தாம்பூலம் தரிக்கும் நேரம் முடிவதற்குள் மனை முகூர்த்தம் செய்வது நல்லது. இந்தத் தேதிகளில், கிழமைகள் மாறுபட்டு வந்தாலும், இந்தத் தேதிகள் மாறுவதில்லை.


வாஸ்து பகவானை வணங்குவோம்

தைமாதம் 12ஆம் தேதி ஜனவரி 25 இன்று காலை 10.40 முதல் 11.15 வரை வரும் நேரமே வாஸ்து விழிப்பு நேரம். இந்த நேரத்தில் வீடு கட்ட வாஸ்து செய்யலாம். வேலூர் மாவட்டம் வாலாஜா பேட்டை ஸ்ரீதன்வந்திரி பீடத்தில் உள்ள வாஸ்து பகவான் ஆலயத்தில் ஹோமங்கள் நடைபெறுகிறது. வாஸ்து பகவானை வணங்கி வர சொந்த வீடு கட்டும் யோகம் கிடைக்கும்.