தெய்வங்களுக்கு வாழைப்பழம் படைப்பது ஏன் தெரியுமா?

⭐ பொதுவாக கோவிலிற்கு செல்லும் பக்தர்கள் அர்ச்சனை செய்வதற்காக தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை படைப்பார்கள். அது ஏன் என்று நீங்கள் யோசித்ததுண்டா?. அதைப் பற்றி இங்கு காண்போம்.
⭐ எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். இதற்கு காரணம் மற்ற எந்தப் பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு, விதையை எறிந்தால் மீண்டும் முளைக்கும்.
⭐ ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையாகிய முக்தியைக் காட்டுகிறது.
⭐ எனது இறைவா! மீண்டும் பிறவாத நிலையைக் கொடு! என வேண்டவே, நாம் கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கின்றோம். அதுபோல் தேங்காய்க்கும் அந்த குணம் உண்டு.
⭐ அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை. மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு, விதையைப் போட்டால் அந்த விதையிலிருந்து மாமரம் உருவாகிறது.
⭐ ஆனால், தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப் போட்டால் அது முளைக்காது. முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னைமரம் முளைக்கும். அது போல, வாழைமரத்திலிருந்து தான் வாழைக்கன்று வரும்.
⭐ அப்படி நமது எச்சில் படாத இவற்றை இறைவனுக்கு உகந்ததாக நமது முன்னோர்கள் படைக்கும் மரபினை உருவாக்கினார்கள். இதனாலேயே நாமும் இந்த மரபினைப் பின்பற்றி வருகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக